செவ்வாய், 17 மார்ச், 2009

குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது சரியா ?

.

ஏன் நிற்கக்கூடாது .
அரசியலமைப்பில்
கொடுக்கப்பட்ட உரிமைகள்
எதற்காகவும் ,எப்பொழுதும் ,
யாருக்கும் ,யாரும் தடுக்கக்கூடாது .
இதில் கவனிக்கப்படவேண்டியது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு
அவர்களின் குற்றங்கள் இருக்கிறதா என்பதுவே .
அது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.
அதுதவிர்த்து
மற்ற சமுக குற்றங்களை காரணம் காட்டக்கூடாது .
ஆனால் ,
அவர் குற்றம் செய்தவர் .
சமுகத்திற்கு இவர் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் ,
தேவையில்லாதவர் .
எனவே ,
இவரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே
தேர்தல் ஆணையம் தான் ஏற்படுத்தவேண்டும் .
அது அவர்களின் கடமை.
அதைத்தவிர்த்து
குற்றப்பிண்ணனியை காரணம் காட்டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமையினின்று தேர்தல் ஆணையம்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.
யார்,யார் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறும் தேர்தல் ஆணையம் யார்,யாருக்கு
ஓட்டுப்போடக்கூடாது என்றும் மக்களுக்கு போதிக்கவேண்டும் ,
கூற வேண்டும்.
இவர் இத்தகைய குற்றப்பிண்ணனி உடையவர் என்பதனை
வாக்குச்சீட்டிலும் ,வாக்குச்சாவடியிலும் தெரியும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும் .
மேலும் ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் தெளிவாகவே தெரிவித்தால்
எந்தக்கட்சியும்
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை
தேர்தலில் நிறுத்தாது
தவிர்க்கும் .
இது தவிர்த்து குற்றப்பிண்ணனியுள்ளவர்களுடைய தேர்தலில் நிற்கும் ஜனநாயக உரிமையை தேர்தல்
ஆணையம் தனது கடமையினின்று தவறி ,
தடுக்கக்கூடாது .
அவர்கள் நிற்பது சரிதான் ,
அவர்களை தேர்ந்தெடுப்பதுதான்
தவறு .
தேர்ந்தெடுக்க வைப்பது தான்தவறு .

.
Download As PDF

1 கருத்து :

ரோகிணிசிவா சொன்னது…

//அவர்கள் நிற்பது சரிதான் ,
அவர்களை தேர்ந்தெடுப்பதுதான்
தவறு .தேர்ந்தெடுக்க வைப்பது தான்தவறு .//
well said, thappu namathu than

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "