வெள்ளி, 8 ஜனவரி, 2010

அரிஸ்டாடிலும் சமச்சீர் கல்வியும் வள்ளுவரும் .

.

.


நொரண்டு :

LYCEUM ,
LYCEUM ம்னு
எங்கண்ணன் சொல்லிக்கிட்டிருந்துச்சு .
அப்படினா என்னாப்பா ?


நண்டு: எங்க ?


நொரண்டு : எங்கநாத்தான் சொல்லுவியா ?


நண்டு:

சரி ,
அதுவா ,

ஏதென்சில அரிஸ்டாடில் நிறுவிய கலைக்கழகம் .


நொரண்டு :அப்படினா ...

நண்டு: எப்படிச்சொல்ல ...ம்....ம்...


நொரண்டு :அதுக்கு ஏன் இந்த இழு இழுக்கர ?


நண்டு:

அதுவா ,

''வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ''

என்ற குறள் ஞாபகத்திற்கு வந்தது .
அதான் .


நொரண்டு :

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் .
நீ சொல்ற குறலுக்கு

பரிமேலழகர் அவர்கள் :

''கடவுளடிகளைச் சேர்ந்தவர்களுக்குப்
பிறவித் துன்பங்கள் இல்லை'' எனவும் ,

மு.வ அவர்கள்:

''விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின்
திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு
எப்பொழுதும்
எவ்விடத்திலும் துன்பம் இல்லை '' எனவும்,

ஆ.வே.ரா.அவர்கள்:

''விருப்பும் வெறுப்பும் இல்லாத
இறைவன் நெறியில் வாழ்பவர்க்கு
எப்பொழுதும் துன்பம் இல்லை '' எனவும் ,
....

நண்டு:

நிப்பாட்டு ...
ம் ...
பரவாயில்லையே ...
நீயும் பல உரைகள படிக்க ஆரம்பிச்சிட்ட போல .
நல்லது .
இதயெல்லா ஏன் படிச்ச ?


நொரண்டு :

நீ என்ன சொல்லுகின்றாய்
என தெரிந்துகொள்ளத்தான் .


நண்டு: ஓ ,அப்படியா ..

நொரண்டு :

அதவிடு ,

உன் கருத்துரைய இப்ப சொல்லு .


நண்டு:

''போதிப்பதில் ,
பாகுபாடு இல்லாத
ஆசிரியரை பெற்ற மாணவர்களுக்கு
என்றும் இடும்பை இல்லை ''

நொரண்டு :நல்லா சொல்லு .

நண்டு:

அதாகப்பட்டது ,

தனது மாணக்கர்களிடம்
இவன் உயர்ந்தவன் ,
இவன் தாழ்ந்தவன் ,
இவன் பணக்காரன் ,
இவன் ஏழை ,
இவன் படிக்கின்றான் ,
இவன் படிக்கவில்லை -
என்ற இது போன்ற
எந்த ஒரு பாகுபாடுகளையும் பார்க்காது

அனைவருக்கும்
ஒரே மாதிரியாக ,
சரிநிகர் சமமாக ,
கல்வி கற்றுத்தரும்
ஆசிரியரைப்பொற்றவர்கள்

இடும்பை என்னும் கேட்டிற்கு ஆளாகார் ..

நொரண்டு :

அட ,
இது நம்ம

''சமச்சீர் கல்வியில்லையா '' ?

நண்டு:

ஆம் ,
அதுவும் அடங்கும் .


நொரண்டு :

ஓ ,
வள்ளுவர் அப்பயே செல்லிருக்காரு பாத்தியா.


நண்டு:

ஆம் ,
அது மட்டுமல்ல
அரிஸ்டாடிலும்
அத்தகைய ஒரு கலைக்கழகம் நிறுவி
மக்களுக்கு நல்லறிவு படைத்திருக்கின்றார் .

நொரண்டு : அது ...


நண்டு: அது தான் LYCEUM ம்


நொரண்டு :

ஓ......

நண்டு:


இடும்பை என்பதில்
இவனெல்லாம் ?,
யார்ரா சொல்லிக்கொடுத்தா ?,
நீயெல்லாம் படிச்சவன்? ,
யாரா உனக்கு வாத்தியார் ?,
எங்க படிச்ச ?,
படிச்சவனா இருந்தா இப்படி செய்வானா ?,
வெளிய சொல்லாத படிப்புக்கே கோவலம்? .
ஏய்யா படிப்ப கோவலப்படுத்திரிங்க ?,
உங்கள மாதிரி படிச்சவனால தான்
உலகமே கெட்டுப்போச்சு ? ,
என்பதுவும் இன்ன பிறவும் அடங்கும் .


நொரண்டு :

ஓ......ஓ....ஓ ....


.....

வள்ளுவர்
அறியப்படவேண்டியஉண்மைகள் -6.

தொடரும் ...


.


.

.

.

.

.


.

Download As PDF

5 கருத்துகள் :

தேவன் மாயம் சொன்னது…

அசத்தீட்டிங்கப்பு!!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
தேவன் மாயம்
அவர்களே

Valpaiyan சொன்னது…

Super

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
வால் பையன்
அவர்களே

Anonymous சொன்னது…

check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "