ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தமிழ் வள்ளுவரின் மழையில் .

.




நொரண்டு :  இன்னைக்கு குழுச்சாச்சா ?

நண்டு : ம் ...

நொரண்டு : குட்டிப்பசங்க கும்மாலமெல்லாம் எப்படி ?

நண்டு :அட ஏன் கேக்கர ,ஒரே ஆட்டம் தான் . அவங்களோட சேந்து . குளிக்க வைக்கரதுக்குள்ள அட அட ..பிறகு சாப்பிடர செய்யரது ..ஏன் கேக்கிற மிகவும் இனிமையான ஒன்று .

நொரண்டு : ம் ...

நண்டு :அவங்க எல்லாம் இயற்கையாகவே இருக்க விரும்புகின்றனர் . அதனால்தான் தங்களின் இயற்கை விருப்பத்திற்கு மாறாக, தங்களின்
அறிவினை வளர்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தினால் , தங்களின் அனைத்தையும் அதற்கேற்றார்போல் அமைத்துக்கொண்டன .

நொரண்டு : நாம அப்படியில்லையே ...

நண்டு :ஆனால் ஒன்று ,அவர்களிடம் பழகிப்பார்த்ததில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன .

நொரண்டு : அதனால்தான் அரிஸ்டாடில் தனது கலாசாலைக்கு உலகொங்குமிருந்து உயிரினங்களை வரவழைத்து ஆய்வு செய்தனர் போலும் .

நண்டு : உண்மையில் அவைகள் கற்றுத்தரும் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளவைகளாகவே உள்ளன .

நொரண்டு :  ஆமாம் ,

நண்டு :நமது தமிழ் மொழிக்கும் அவர்களின் மொழிக்கும் எவ்வளவு ஒத்துவருகின்றது என்பதை அவர்களுடன் உரையாடிப்பார்த்த பொழுது மிகவும் ஆச்சரியப்படவைக்கும் பல விசயங்கள் ...

நொரண்டு : என்ன ?

நண்டு :தமிழ் எவ்வளவு தொன்மையானது ,அதோடு மட்டுமல்ல எவ்வளவு இயற்கை இயல்புடன் இன்றுவரை இருந்து வருகின்றது என்பதற்கு தமிழ் மொழியையும் மற்ற பிற மொழியையும் விலங்கு மற்றும் பிற உயிரினங்களின் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிகிறது .தமிழ்
அனைவருக்குமான அதாகப்பட்டது அனைத்து உயிரினங்களுக்குமான மொழியமைவுடன் இருக்கிறது என்பது .

நொரண்டு : ஓ ,அப்படியா ...

நண்டு :ஆனால் இன்று நாம் அதன் விரியும் தன்மையை மலுங்கடித்துக்கொண்டு வருகின்றோம் .

நொரண்டு : இப்பொது இருக்குற பொழப்போ ....நீ வேற ...

நண்டு : ஒங்கிட்ட சொல்லி ஒரு பயனும் இல்லைதான் .இருந்தாலும் ஒங்கிட்டயும் உண்மையை கொண்டு செல்வது என் கடமை .

நொரண்டு : யார் கொக்கரது ...சரி ,சரி ,அருக்காத ...ஊருக்குப் போன கதையச்சொல்லு ...

நண்டு :குட்டிப்பசங்களை யெல்லாம் குஷிப்படுத்திட்டு நானும் குஷியாயிட்டு வந்துட்டேன் .

நொரண்டு : ஏன் உடனே வந்துட்டே ?

நண்டு :மழை வர்ர மாதிரி மேகம் கருத்ததா அதான் ...

நொரண்டு : இப்ப எந்த காலத்துல வந்திருக்கு .எனக்குத்தெரிஞ்சு ஞாபகமில்ல . ம்.... எனக்கு ஒரு சந்தேகம் ...

நண்டு :என்ன?

நொரண்டு :  பெங்கல் பண்டிகைல மழையப்போற்றது தானே முக்கியம் .

இளங்கோ கூட

''மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.'' -னு ....
அப்படி பெங்கல இல்லையே ....

நண்டு :ம் ....

நொரண்டு : என்ன ...ம் ....

நண்டு :வள்ளுவரும்

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ் தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளில் ...

நொரண்டு : இதுக்கு மு.வ : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால்,
மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் . என்றும் ....

நண்டு :பொதுவான கட்டொரும்பு உரை .

நொரண்டு : அப்படினா .

நண்டு :உரை எழுதனும் ஆனால் மூளைய பயன்படுத்தாம , முன்னெரும்பு பேன பாதையிலே ஆனால் கொஞ்சம் நடைமாத்தி .

நொரண்டு :  சரி உன் உரை கூறு .

நண்டு : மழை வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தமிழாக உணரும் பான்மையை உடைத்து .

நொரண்டு : இன்னும் ...

நண்டு :உலகத்து வாழும் உயிர்களுக்கு தமிழ் மழை போன்றது .

தமிழ்  என்பதை இக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியதை காண்க .
இக்குறளின் சிறப்பே இது தான் .



....


.
வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....மீள்வு ...


. Download As PDF

6 கருத்துகள் :

Ahamed irshad சொன்னது…

சிறப்பான இடுகை..

தினேஷ்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு பொங்கலோ பொங்கல் சார்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நண்டு.....................சூப்பர்.....

Unknown சொன்னது…

(தமிழ்)மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால்,(தமிழ்)மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம்..........

Unknown சொன்னது…

குழுச்சாச்சா ?

ஹேமா சொன்னது…

தமிழ்..சொல்லவே இனிக்கிறது !

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "