புதன், 12 பிப்ரவரி, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பைத்தியக்கார முதல்வர்,சர்வதிகாரி,பொய்யர் மற்றும் ...?



நண்டு :  வணக்கம் நொரண்டு.

நொரண்டு :   வாங்க நண்டு.

நண்டு : என்ன விசேசம்.

நொரண்டு :   ஒன்னும் இல்லை,டெல்லி அரசியல் இன்று ஒன்றும் இல்லையானு பார்த்தேன்

நண்டு :  ம் ...

நொரண்டு :   என்ன ? ம் ...

நண்டு : சொல்ல வந்தத சொல்லு.

நொரண்டு :   ''அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வனுசுஷில் குமார் ஷிண்டே  '' 

நண்டு :  சரி அதனால் என்ன ?.

நொரண்டு :   அதபத்தி ...

நண்டு :ம் ...

நொரண்டு :   அப்புறம்

நண்டு :  சொல்லு .

நொரண்டு :  '' வினோத் குமார் பின்னி  அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர், சர்வதிகாரி என  .. ''   

நண்டு : அதனால என்னப்பா ?.

நொரண்டு :   இல்லப்பா , உண்மையில் அவர் எப்படிப்பட்டவர்னு கேட்க வந்தேன்.

நண்டு :  நான் என்னத்த சொல்ல ,

நொரண்டு :   சட்டத்தை மீறியே செயல்படராருனு  சொல்ராங்களே. அதப்பத்தி.

நண்டு :  அதப்பத்தி ...சட்டம் தன் கடமையை செய்யும்னூ அவருக்கு தெரியும்.

நொரண்டு :   வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடுகிறார் என கூறுவது பத்தி

நண்டு : நாடகம்னா ஆடித்தானே ஆகனும்.

நொரண்டு :   என்னப்பா எதக்கேட்டாலும் இப்படியே சொல்ர.

நண்டு :  சரி , விசயத்துக்கு வரேன்,
அரவிந்த் கெஜ்ரிவாலும் சரி ஆம் ஆத்மி கட்சியினரும் சரி ,மிகவும் தூய கரங்களுடன் பொதுத்தொண்டாற்ற வந்தவர்கள் .

நொரண்டு :   ம்...

நண்டு : காந்தி கூட தனது நடவடிக்கைகளுக்காக அதிகம் விமரிசிக்கப்பட்டுள்ளார்.வெற்றி பெற்ற பின் புரிந்துகொள்ளப்பட்டுள்ளார்.

நொரண்டு :    ம்...

நண்டு :  அரவிந்த் கெஜ்ரிவாலும் சரி ,ஆம் ஆத்மியினரும் சரி ,சில பேச்சுக்களிலும்,நடவடிக்கைகளிலும் மாற்றம் காணவேண்டும்.மற்றபடி சரியாகத்தான் இயங்குகிறார்.

நொரண்டு :   அப்படியா .

நண்டு : மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த ஸ்தானத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்  ...மக்களை தொந்தரவு செய்யாமல் ...

நொரண்டு :   ஓ...அதனால் தான் நீ அவர்களின் மக்களை தொந்தரவு தரும் செயல் குறித்து 
நண்டு :   அது ....ம் ...அரசியல்...அவர்கள் இன்னும் படிக்கவேண்டிய பகுதி அதிகம் என்பதால் ,அதனை பிறகு பார்ப்போம்.

 நொரண்டு :   ம்...

நண்டு : இன்னும் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது எனில் ,நல்லவர்கள் நாட்டில் இருப்பதால் தான்.அவர்களை வெளிக்கொணர்ந்த விசயத்தில் அன்னாவிற்கும்,ஆம் ஆத்மிக்கும் நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

நொரண்டு :   ஆமாம் ,அது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட.

நண்டு :  அரசியல் பொய்யர்கள் ,அரசியல் சர்வதிகாரிகள்,அரசியல் கொள்ளையர்கள்,அரசியல் திருடர்கள்,மற்றும் அரசியல் பித்தலாட்டக்காரர்கள் மத்தியில் நல்லவன் ஒருவன் அரசியல் பொய்யனாக, ,அரசியல் சர்வதிகாரியாக,அரசியல் கொள்ளையனாக,அரசியல் திருடர்னாக,மற்றும் அரசியல் தெரியாதவனாக  தெரிவது இயல்புதான்.

நொரண்டு :   ஓ...

நண்டு : இந்தியாவிற்கு ஆம் ஆத்மியினரின் சேவை மிகவும் அவசியமான ஒன்றாகும் .

நொரண்டு :   எதற்கு.

நண்டு :  ஆளும் வர்கத்தினருக்கு இவர்கள் தான் சிம்ம சொப்பனம்.

நொரண்டு :  அதனால் என்ன ...?

நண்டு :  அதனால்,ஆளும் வர்கத்தினர் மக்களிக்கு எதிராக என்றும் செயல்பட முடியாது.

நொரண்டு :  தெளிவா... உதாரணம் ஒன்னுடன் சொல்லு.

நண்டு:ம்....உதாரணத்திற்கு...ஒடுக்கப்பட்ட, நலிந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதுபோல் ஆளும்வர்க்கத்தினர் செயல்பட்டால்,அதனை ஒடுக்கும் வல்லமை இவர்களிடம் தான் உண்டு.

நொரண்டு :   ம் ...புரியுது ...புரியுது.

நண்டு :  மற்ற கட்சிகள் என்றும் ஆதாய அரசியலை மேற்கொள்வதால் அவர்களை நம்ப முடியாது.

நொரண்டு :   சரி தான் ...  அப்ப  நீ ...

நண்டு :எனக்கு நேரமச்சு நான் வரேன் ...மற்றதை பிறகு விரிவா பேசலாம்.







 படம் நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

6 கருத்துகள் :

Unknown சொன்னது…

சதி வலையில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் தப்பிப்பார் என நம்பலாம் !
த ம 2

Unknown சொன்னது…

இப்போது மீடியாக்களுக்கெல்லாம் பப்ளிசிடி முடிஞ்சிபோச்சு அடுத்து அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்க்கிக்கொண்டு ஆம் ஆத்மிக்கு எதிராக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தெளிவான உதாரணம்...

Unknown சொன்னது…

கேஜ்ரிவால் நடிக்கும் நேற்று இன்று நாளை

நேற்று : சாகும்வரை ஊழலை எதிர்ப்பேன்.

இன்று : பெட்டி. தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை

நாளை : ஆழம் தெரியாம இதுல கால விட்டுட்டேனே

கே. கோபாலன்

Unknown சொன்னது…

மாற்றுப் பதிவு :

கேஜ்ரிவால் நடிக்கும் நேற்று இன்று நாளை

நேற்று : மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். நேர்மை. அது நேர்மை.

இன்று : பெட்டி. தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை.

நாளை : யாரை நம்பி நான் பிறந்தேன். போங்கடா போங்க.

ந்ன்றி,

கோபாலன்

Unknown சொன்னது…

என்னைப் பொறுத்தவரை அவர் போதுமான ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆதரவோடு ஆட்சி அமைக்க முற்பட்ட போதே அவர் ஊழல் ஒழிப்புக் கொள்கை அழிந்துவிட்டது ! அவர் செயலே ஊழல்தான்!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "