புதன், 19 மார்ச், 2014

தேவகுமாரனை நோக்கி .







முன்னோர்களின்

வடு உடல்

நிறமாய்
நீங்காத பாவமாய்

கண்கள் முழுதும்
காட்சி கலக்கமாய்
பளிங்கு செவியாய்

மடையனாய்
மூடனாய்
முட்டாளாய்
சமுதாயத்தில்
சமூகத்தில்
சாதியால்
எப்பொழுதும் எப்பொழுதும்
உடல் வெம்பி
நாக்கு உள் இழுத்து
மொழி பேசா வாய்
வெளிச்சொல்லா
பயத்தில்
தடிமனாய்
அச்சத்தில்
போதை மிதந்து
பிதற்றி
ஓலை சுவற்றுக்குள்
நித்தம் நித்தம்
தவம் தவம்
பெண் மீதேறி
தேவகுமாரனை நோக்கி.


.


.
மீள்வு.
Download As PDF

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "